search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ விபத்தில் கருகிய இளம்பெண் பலி"

    திண்டுக்கல் அருகே தீ விபத்தில் கணவருடன் கருகிய இளம்பெண் பலியானார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் மனைவி நாகஜோதி (வயது 24). சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது நிஷாந்த் (5), நந்தகுமார் (3)என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் காளீஸ்வரன் மற்றும் நாகஜோதி படுகாயமடைந்தனர். அருகில் இருந்த மகன் நந்தகுமாருக்கும் காயம் ஏற்பட்டது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நாகஜோதி பலியானார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×